பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

30.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-225
தலைப்பு !

மூண்ட தீ”

மூண்டதீ பிளம்பில்
மாண்ட உயிர்களே !
ஆண்டுகள் கடந்தும்
அணையா ரணங்களே !

வேண்டும் தாய்நாடென
வெந்தழிந்த உடல்களே!
நீண்டநாள் போராடியும்
நிலைபெறாத அலைகளே !

ஆண்டவன் பூமியென
ஆழத்துடித்த மறவர்களே !
சீண்டி அழைத்தே
சினம்கொள்ள செய்தார்களே !

தீண்டியே உயிர்களை
தீக்இரை கொடுத்தார்களே !
மாண்டும் மண்ணில்
மறைத்திடத் துடித்தார்களே !

ஊண்உயிர் இழந்தும்
உறவையே பிரித்தார்களே !
வேண்டுமென்றே அனைத்தையும்
வேரோடு பிடுங்கினார்களே !

வேண்டாமென்ற வேதனையைமட்டும்
விடைபெறாது வைத்தார்களே !
தாண்டிஎல்லை சென்றாலும்
தசையாடி துடித்தீர்களே !

நன்றி வணக்கம் 🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan