” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி . அபிராமி கவிதாசன்.

12.07.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -118
தலைப்பு !
“ கோடை கொண்டாட்டம் “

கோடை விடுமுறை கொஞ்சுகின்ற மலர்களே
ஓடை நீரின்றி ஒளிந்தாடும் கெண்டைகளே

பள்ளி விடுமுறையாம் பட்டாம் பூச்சிகளே
துள்ளிகுதித் தோடி தூரப் பறப்போமே

பழச்சோலை நாடிச்செல்லும் பறவை இனக்கூட்டமே
பழகிய நட்புடனே படையெடுத்து ஓட்டமே

கொஞ்சி மொழிபேசி கொத்தி இறைதேடி
வஞ்சம் அறியாது வாழ்வு சென்றிடுமே

எண்ணமெல்லாம் ஆசைகொண்டு ஏங்கிடுவர் நட்புகண்டு
திண்ணமாக வாதிடுவர் திரும்பிடுவோம் நன்றேஎன்று

கூடிவாழும் கூட்டைவிட்டு குழாவிடுவர் நட்புவட்டம்
தேடிஓடி தெருவோரம் தெம்மாங்கு பாடிடுவர்

கோடை விடுமுறை கொண்டாட்ட குதுகலமே
மேடையின்றி ஆடிப்பாடி மெருகேற்றி மகிழுவரே!

மிக்க நன்றி பாவை அண்ணா 🙏
அதிபர் அவர்களுக்கும் நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan