“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

திருமதி . அபிராமி கவிதாசன்.

12.07.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -118
தலைப்பு !
“ கோடை கொண்டாட்டம் “

கோடை விடுமுறை கொஞ்சுகின்ற மலர்களே
ஓடை நீரின்றி ஒளிந்தாடும் கெண்டைகளே

பள்ளி விடுமுறையாம் பட்டாம் பூச்சிகளே
துள்ளிகுதித் தோடி தூரப் பறப்போமே

பழச்சோலை நாடிச்செல்லும் பறவை இனக்கூட்டமே
பழகிய நட்புடனே படையெடுத்து ஓட்டமே

கொஞ்சி மொழிபேசி கொத்தி இறைதேடி
வஞ்சம் அறியாது வாழ்வு சென்றிடுமே

எண்ணமெல்லாம் ஆசைகொண்டு ஏங்கிடுவர் நட்புகண்டு
திண்ணமாக வாதிடுவர் திரும்பிடுவோம் நன்றேஎன்று

கூடிவாழும் கூட்டைவிட்டு குழாவிடுவர் நட்புவட்டம்
தேடிஓடி தெருவோரம் தெம்மாங்கு பாடிடுவர்

கோடை விடுமுறை கொண்டாட்ட குதுகலமே
மேடையின்றி ஆடிப்பாடி மெருகேற்றி மகிழுவரே!

மிக்க நன்றி பாவை அண்ணா 🙏
அதிபர் அவர்களுக்கும் நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading