” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி .அபிராமி கவிதாசன்

கவிஇலக்கம் -176. 21.07.2022
தலைப்பு !

“ஆடிப்பெருக்கு”
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரியே
கூடிமக்கள் வரவேற்க கோடிபெரும் உழவினிலே
ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து ஆயத்தமே விதைவிதைக்க
நாடிமக்கள் ஆலயத்தில் நான்குபுறமும் தேடிவைக்க
ஆடியிலே தேதிசோல்லி ஆவணியில் வைபோகம்
ஆடிக்கூழும் காச்சி வைச்சி ஆலயத்தில் காத்திருந்து
தேடித்தேடி சொந்தங்களை தேவபாணம் தந்தனரே

அம்மனுக்கு பொங்கலிட்டு ஆத்தாவந்து வாக்குசொல்லி
நம்மஊரு கோயிலிலே நாளுபேரு குலவபோட்டு
மாரியம்மன் மகிமையெல்லாம் மங்கலமாய் பாடச்சொல்லி
வீரியமாய் கும்மிதட்டி வீதிவழி முளைப்பாரி
மங்கையர்கள் மாடத்தினில் மங்களமாய் பூசையிட்டு
ஆடிமாத அம்மனுக்கு ஆனந்தமாய் பாட்டுகட்டி
ஆடிவருகிறாள் வருகிறாள்ஆத்தா பாடிவருகிறாள்

கவிப்பார்வை தட்டிக்கொடுப்பு சோதரிகள்..அதிபர்
சோதரி கலைவாணிமோகன் அவர்களுக்கும்
என் மனமர்ந்த நன்றிகள்🙏🙏🙏

Nada Mohan
Author: Nada Mohan