திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிவாரம் 203.
சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்.

தலைப்பு :
****மார்கழி****

மின்னொளி தீபங்கள் மிளிர்ந்திடும் காலங்கள்
இன்னல் நீக்கிடும் இயேசுவின் பாதங்கள்
மன்னுயிர் நேசங்கள்
மகிழ்விக்கும் பரிசில்கள்
அன்புறும் அகிலங்கள்
அருளிசைக் கீதங்கள்

காரிருள் சூழ்ந்திடினும் கண்களில் ஒளிர்வுகள்
மாரியின் பொழிவுகள்
மண்ணினில் வாசங்கள்
சீரியநற் குடிலினிலே
சித்திரப் பாலனவர்
பூரிப்பில் உயிரினங்கள்
புடைசூழும் பொழுதுகள்

உறையுள் இல்லத்தே
ஒளிரும் மின்மணிகள்
இறையின் இருள் அகல்வில்
இணையும் இதயங்கள்
மறையும் துன்பத்தால்
மலரும் புன்னகைகள்
முறையாய் வருங்காலம்
முழுமதி நிறைவாகும்.

***…….***

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading