திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

****கலைவாணி****
தங்கக் கைகளில் தாங்கும் வீணையில்
அங்கையற் கன்னியின் அருளின் நாதம்
பங்கயம் உறைகின்ற பிரம்மனின்தேவி
திங்களாய் ஒளிர்கின்ற தீந்தமிழ்ச் சக்தி

பல்லின பாக்களும் பூக்களும் தொடுக்க
சொல்லில் இனிக்கும் சுந்தர வல்லி
வல்லமை ஞானம் வளர்க்கும் சக்தி
நல்வித்தை நல்கிடும் நாமகள் நாயகி

பவளமல்லி பூமாலை பார்வதிக்கு சாத்தி
நவமணியாய் நற்றீபம் நாற்றிசையும் ஏற்றி
உவப்பாய் தீன்பண்டம் உவந்தளித்துப்
போற்ற
நவராத்திரி நாளில் நலமருள்வாள் சக்தி .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading