” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*நாதம்*
சந்தத்தின் பாடல்களில் சங்கதிகள் கொஞ்ச
சாரீரம் கொண்டாடும் சங்கீத நாதம்

செந்தமிழின் செவ்வியலில் செந்தாள நடனம்
சிந்துமகள் காலசைவில் சிலம்பொலியின் நாதம்

சுந்தரக் கலைவாணி சுரமீட்டும் வீணை
சிந்திவரத் தேனிசையில் சேர்கின்ற நாதம்

நந்தகோபன் குழலோசை நந்தவனம் காண
பந்தமென பசுக்களுக்கும் பரிசளிக்கும் நாதம்

மங்கையவள் மணக்கோலம் மணவறையில் தங்க
மாங்கல்யம் சேர்க்கின்ற
மங்களத்து நாதம்

சங்கத்தமிழ் தொடர்ந்து சாற்றும் தமிழ் ஓசை
சந்திக்கும் தங்குமந்த
சங்கு முழங்கு நாதம்.

Nada Mohan
Author: Nada Mohan