மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 213

தலைப்பு – நாதம்

பூபாளம் இசைக்க பூங்குயில்கள் பறக்குது
நாட்டிய மயில்கள் நட்டுவாங்கத்தை தேடுது
மூச்சுக் காற்று மூங்கிலின் நாதமானது
இயற்கையின் அற்புதமே இன்னிசை சுவாசமே.

ஏழு ஸ்வரங்களும் ஒய்யரமாய் இசைக்க
சூரியன் வருகையை அலைகள் இசைந்தாட
ஆரவாரமாய் ஹம்சத்வனியில் குருவிகள் கீச்சிட
அழகான காலைவேளை நாதம் செவியினிலே.

சிந்துபைரவி நில்லடிசொல்ல சில்வண்டு கேட்கவில்லை
மோஹன காந்தாரம் மொட்டுக்களாய் மலருது
பைரவியின் நிசாதத்தை பைங்கிளிகள் இசைக்க
சங்கராபரணம் நாதமாய் சங்கமம் செய்யுது.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
(05/03/2023)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading