மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 214

தலைப்பு – தீ

அரிசியோ அடுப்பினிலே அரசியலோ அதிகாரத்திலே
எண்ணிக்கைக்கு வாக்குறுதி எண்ணிலடங்கா அவலங்கள்
அத்தனையும் தீயாய் அவனியிலே வலம்வருகுது
அனைக்க யாருமில்லை ஆர்பாட்டங்கள் நாடெங்கும்.

இயற்கையை சீண்டியதால் இலவசமாக சுனாமி
மிருகங்களை விரட்டியதால் மிடுக்கான காட்டுத்தீ
பள்ளங்கள் தோன்றியதால் பலமான நிலநடுக்கம்
அனுவாயுதப் போட்டியால் அனுவெல்லாம் புற்றுநோய்.

நீலாம்பரியானால் அக்னிதேவி நீண்ட நாட்களாய்
அமேஷன் எரியுது அந்தாட்டிக்கா உருகுது
ஆயுள் நீடிக்கவில்லை ஆசைகளும் அடங்கவில்லை
தீயினால் வாழ்வுமுடியுமோ? தீயதும் சேர்ந்தெரியுமோ?

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/03/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading