” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்.

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 255

தலைப்பு – பகலவன்

பூக்களும் பறவைகளும் பூபாளம் இசைத்திட
புற்களில் பனித்துளிகள் நளினமாய் நடனமாட
குயிலும் கூவுது காகம் கரையது
ஆதிதாளம் ஐதியில் பகலவன் உதயமாகிறான்.

ஆயிரம் நாமங்கள் அழகாய் இருந்தும்
பகலவன் என்றதும் பாசமாய் இருக்குது
பட்டினியில்லா வாழ்வில் படியளக்கும் சாமியது
பட்டமரமும் பசுமையாகி வேடந்தாங்கல் ஆகுது.

ஊதாக்கதிரவன் உலகெல்லாம் செம்மஞ்சள் பரப்பி
வியர்வையை வெளியேற்ற கொழுப்பை கரைக்க
இலவசமாய் மருத்துவம் தருகிறான் பகலவன்
ஓசோனை காப்போம் புற்றுநோய்களை தடுப்போம்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/03/2024

Nada Mohan
Author: Nada Mohan