முன்னூறாய் முகிழ்ப்பு

வசந்தா ஜெகதீசன் முன்னூறாய் முகிழ்ப்பு.. திறமையின் தேடல் திசையெங்கும் விரவும் தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும் சமூகத்தின் சாளரம்...

Continue reading

சித்திரைப்புத்தாண்டு

இரா.விஜயகௌரி புத்துயிர் விதைத்தொரு புதியதோர் ஆண்டு விளைந்தது பூமியிலே -இங்கு சித்திரை விரித்தெழும் சீரிய பாதையை செம்மையுள் பதித்தெழுவோம் எத்துணை...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 202

தலைப்பு – நினைவு நாள்

பிறப்பைப் பின்தொடரும் இறப்பு ஒருநாள்
உறவுகளைப் பிரித்து உயிரை எடுத்திடும்
இறப்பின் பின்பும் உலாவிடும் அவரவர்
தரவுகள் ஊரிலும் தரணியிலும் நற்பெயருடன்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அண்ணல் காந்தியவர்
ஓங்கிய சுதந்திரத்தை அகிம்சைவழி பெற்றார்
ஏங்கிய வாட்டமுற்ற ஏழைகளின் துயர்களை
தாங்கினார் அன்னை திரேசா அமைதியுடன்.

நாட்டுப்பற்றுடன் நல்லவற்றை நிறைவுடன் நாட்டியோர்
காட்டிய தியாகங்களை கருணையை மக்கள்
ஏட்டில் எழுதுவர் என்றும் போற்றுவர்
நீட்டுவர் புகழ்க்கரத்தை நினைவுதின நன்னாளில்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
28/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading