” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி – 94

தலைப்பு – ஆசையால் அவதி

ஆசையால் அவதிப்பட்டு அநியாய வயதிலே
ஆடம்பரமாய் வாழ்வதற்கு அவமதிப்பை வெகுமதியாக்கி
அல்லும் பகலும் அவதியாய் அலைந்து
அவனியில் இருக்கிறோம் அவசர உலகிலே.

அன்பை விதைக்காமல் ஆவேச வார்த்தைகளால்
அவலங்களை அமைதியாய் கடக்க நினைத்து
அடைகிறோம் அல்லல்லுறும் வாழ்க்கையை
அகிலமெல்லாம்
அடைந்த செல்வம் காப்பாற்றவில்லை ஆயுளை.

அன்பாய் வாழ்ந்து அழகாய் உடுத்து
அமைதியாய் அகிலத்தில் அறநெறியில் நடந்து
அகத்திலும் புறத்திலும் ஆண்டவனை இருத்தி
அகிலம் போற்ற அறவழியில் வாழ்க.

நன்றி வணக்கம் 🙏

திருமதி . பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
01/12/2022

Nada Mohan
Author: Nada Mohan