” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமலை கோணேஸ்

அழகு
இயற்கை அழகில்
இதயம் பதியும்
இதமாய் காலை
பொழுது மலரும்.

களிப்பொலி எழுப்பும
காலை குருவிகள்
ஒளிரும் சூரிய
கதிர்கள் ஒளிரும்.

வானத்தே மேக
வண்ணம் தெளிவாய்
நீலம் வெள்ளை
ஜாலம் பொலிவாய்

தோட்டம் சந்தை
தோழிற் சாலைக்கும்
றோட்டில் சிறுவர்
பள்ளி தலத்தும்

கூட்டம் கூட்டமாய்
ஓட்டம் போடும்
மாட்டு ,மோட்டார்
வண்டிகள் போகும்.

ஊரின் அழகை
உளத்தில் தேக்கும்
காலை காட்சி
கவலையை மூட்டும்.

-திருமலை கோணேஸ்-

Nada Mohan
Author: Nada Mohan