நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

திருவிழா

ஜெயம் தங்கராஜா

ஊரெங்கும் வந்தது திருவிழாக் காலம்
பாரங்கே மகிழ்ச்சியில் மக்களின் கோலம்
சிறுவர் முதல் பெரியோரும் கொண்டாட்டம்
உறவுகளாய் நன்னாளில் ஒன்றுசேரும் பெருங்கூட்டம்

இறைவனின் அருள் வேண்டும் தருணம்
நிறைவான நன்றிதனை தெரிவிக்கும் மனம்
சொந்தங்களும் தங்களுக்குள் பகிர்ந்திடுவார் சந்தோசத்தை
சொக்கவைக்கும் அனுபவங்கள் ஆண்டுவிடும் மனத்தேசத்தை

ஒன்றாகக்கூடி ஆடிப்பாட ஒரு தினம்
பண்பாட்டு கலைகளும் நிகழ்ந்திடும் இத்தினம்
வேட்டும் வெடியுமாக திருவிழா களைகட்டும்
வேட்டியும் சேலையுமாக காட்சிகளோ சொட்டும்

Nada Mohan
Author: Nada Mohan