திருவிழா

திருவிழா செல்வி நித்தியானந்தன்

கோடை வந்தாலே
கோயில் விழாவாகும்
கோபுரம் எங்குமே
கொள்ளை அழகாகும்

மங்கள வாத்தியம்
மனதை இதமாக்கும்
மகிமையாய் நேர்த்தி
மண்ணிலே பலவாகும்

மக்கள் கூட்டங்களாலே
களவு அதிகரிக்கும்
மதம் பலகடந்தும்
மகிழ்வு இணைவாகும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading