திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

தீதும் நன்றும்

ராணி சம்பந்தர்

23.05.24
ஆக்கம் 317
தீதும் நன்றும்
திருப்தி என்பது தீராதது
அதிதிருப்தி என்றும்
மாறாதது
மனம் கொண்ட மாளிகை வாழாது
கனமோடு குமிறல் ஆனது

மனித நேயம் மறைய
இனத்துவேஷம் துரத்தி
பசி பட்டினி அறைய
பட்டம் படிப்பு எல்லாம்
தொலைந்தது

களவு வெட்டுக் குத்து
மரணம் பறை சாற்ற
உளவு தொட்ட விவசாயி
மன உளைச்சலிலானது

நன்மை,தீமை, நல்லது,
கெட்டது எது எனத் தெரியாது தீதும் நன்றும் என்று மனம்
போன போக்கில் தீயது
சிக்கி மனிதம் தொங்குகிறது.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading