” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

ஜெயம்
ஜெயம்
ஜெயம்

ஜெயம்
ஒரு காலத்தில்
உறவுகள் எனக்கு உயிர்
அவர்களின் சிரிப்பே என் சுவாசம்
பாசம் பொங்கிய வார்த்தைகளில்
என் உலகம் முழுதும் நனைந்திருந்தது

காலங்கள் மாறியது
பாசம் என்ற பெயரில்
பிணைப்பு கயிறுகள் அவிழ்ந்து கொண்டன
அன்பு சொல்லியவர்களே
அந்நியமாகி சென்றனர்

உறவுகள் இருந்தன
ஆனால் பிணைப்பு இல்லை
கண்ணீர் விழிகளில்
உள்ளத்துள் இரணங்கள்
உறவுகள் என்றால் உண்மையா
பழகியதும் பொய்யா

அன்பைத் துறந்து
துறவு பூண்ட உறவுகள்
விலகல்
எனது புதிய உறவு அமைதிதான்
துறவு என்றால் ஓட்டமா

Author: