பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

ஜெயம்
ஜெயம்
ஜெயம்

ஜெயம்
ஒரு காலத்தில்
உறவுகள் எனக்கு உயிர்
அவர்களின் சிரிப்பே என் சுவாசம்
பாசம் பொங்கிய வார்த்தைகளில்
என் உலகம் முழுதும் நனைந்திருந்தது

காலங்கள் மாறியது
பாசம் என்ற பெயரில்
பிணைப்பு கயிறுகள் அவிழ்ந்து கொண்டன
அன்பு சொல்லியவர்களே
அந்நியமாகி சென்றனர்

உறவுகள் இருந்தன
ஆனால் பிணைப்பு இல்லை
கண்ணீர் விழிகளில்
உள்ளத்துள் இரணங்கள்
உறவுகள் என்றால் உண்மையா
பழகியதும் பொய்யா

அன்பைத் துறந்து
துறவு பூண்ட உறவுகள்
விலகல்
எனது புதிய உறவு அமைதிதான்
துறவு என்றால் ஓட்டமா

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading