கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்..

வியாழன் கவி 2133
சிவதர்சனி இராகவன்

துளிர்ப்பாகும் வசந்தம்..

தரை எங்கும் மண் கிழிக்கும்
நிரை நிரையாய்ச் செடி உயிர்க்கும்
விண் மடியில் ஒளி நிறைக்கும்
விடியலே பிரகாசம் தெளிக்கும்..

வண்ணங்கள் எங்கும் தெளிக்கும்
வகை வகை வண்ணம் சிலிர்க்கும்
மொட்டை மரங்கள் முடி முழைக்கும்
மொழி தேடிப் புள்ளினம் பாடும்..

பகலின் நீளம் நீண்டுபோகும்
பனி மறைந்து எங்கோ ஆகும்
பகலவன் கரம் பலதாய்ச் சேரும்
நிலவவள் மேனி நிறைந்து காணும்..

இதயக் கூடு மகிழ்ந்து கொள்ளும்
இனிக்கும் நினைவு இறக்கை விரிக்க
வசந்தத்தின் துளிர்ப்பே வரமாயாகும்
சுகந்தம் சேர்த்து சுவாசம் மாறும்..
சிவதர்சனி இராகவன்
3/4/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading