நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்..

வியாழன் கவி 2133
சிவதர்சனி இராகவன்

துளிர்ப்பாகும் வசந்தம்..

தரை எங்கும் மண் கிழிக்கும்
நிரை நிரையாய்ச் செடி உயிர்க்கும்
விண் மடியில் ஒளி நிறைக்கும்
விடியலே பிரகாசம் தெளிக்கும்..

வண்ணங்கள் எங்கும் தெளிக்கும்
வகை வகை வண்ணம் சிலிர்க்கும்
மொட்டை மரங்கள் முடி முழைக்கும்
மொழி தேடிப் புள்ளினம் பாடும்..

பகலின் நீளம் நீண்டுபோகும்
பனி மறைந்து எங்கோ ஆகும்
பகலவன் கரம் பலதாய்ச் சேரும்
நிலவவள் மேனி நிறைந்து காணும்..

இதயக் கூடு மகிழ்ந்து கொள்ளும்
இனிக்கும் நினைவு இறக்கை விரிக்க
வசந்தத்தின் துளிர்ப்பே வரமாயாகும்
சுகந்தம் சேர்த்து சுவாசம் மாறும்..
சிவதர்சனி இராகவன்
3/4/2025

Nada Mohan
Author: Nada Mohan