மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

தேவ கஜன்

கலவரம்

நிலவரம் மாற்றும் கலவரம்
பலதரம் கண்ட எம்மினம்
சுதந்திர நிழல் தேடி
சூழ்ச்சிக்குள் புதையுண்டு
சுடுகாடாய் போனதே இன்று.

நாங்கள் எழுவோம்
என்று நினைத்து
எழுந்த போதெல்லாம்
வீழ்ந்து போனதே
பல தருணங்கள்.

வாழ்ந்து விடலாம் என்றால்
வரும் ஆட்சியாளர்கள்
எங்கள் வாழ்வை
வழியில்லா வாழ்வாக்கிவிட்டார்கள்
என்பதே எம் பேரவலம்.

கலவரங்களுக்குள் கட்டுண்ட
எங்கள் வாழ்வு
வலிகள் நிரம்பி
நிம்மதியை கரைக்கின்றது
ஒதுக்கப்பட்டவர்களாக
உலகும் ஓரவஞ்சகம் புரிகின்றது.

நாங்கள் தனித்து விடப்பட்டு
தரம் குறைந்த பொருளாக
தூக்கி எறியப்படும் நிலை மாற
வழியொன்றும் இனி இல்லை
படைத்தவன் பக்கமும்
குறை சொல்ல ஒன்றும் இல்லை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading