திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

தேவ கஜன்

கலவரம்

நிலவரம் மாற்றும் கலவரம்
பலதரம் கண்ட எம்மினம்
சுதந்திர நிழல் தேடி
சூழ்ச்சிக்குள் புதையுண்டு
சுடுகாடாய் போனதே இன்று.

நாங்கள் எழுவோம்
என்று நினைத்து
எழுந்த போதெல்லாம்
வீழ்ந்து போனதே
பல தருணங்கள்.

வாழ்ந்து விடலாம் என்றால்
வரும் ஆட்சியாளர்கள்
எங்கள் வாழ்வை
வழியில்லா வாழ்வாக்கிவிட்டார்கள்
என்பதே எம் பேரவலம்.

கலவரங்களுக்குள் கட்டுண்ட
எங்கள் வாழ்வு
வலிகள் நிரம்பி
நிம்மதியை கரைக்கின்றது
ஒதுக்கப்பட்டவர்களாக
உலகும் ஓரவஞ்சகம் புரிகின்றது.

நாங்கள் தனித்து விடப்பட்டு
தரம் குறைந்த பொருளாக
தூக்கி எறியப்படும் நிலை மாற
வழியொன்றும் இனி இல்லை
படைத்தவன் பக்கமும்
குறை சொல்ல ஒன்றும் இல்லை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading