நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 224. 30.5.23

நகுலவதி தில்லைதேவன்.

மூண்ட தீ

கார்த்திகையில் அண்ணாமலையில்
அண்டாவில் மூண்டிய 🔥
பத்தகோடிகளை
பரவசப்படுத்துமே.

சிறிலங்காவில்
மூண்டது தீ 🔥
சீதையிட்ட
சாபமே தொடருது
தீவைப்புக்களே.

தீயினால் சுட்ட புண் ஆறுமே நாவினால் சுட்ட வடு ஆறுமோ. தீயை மூட்டாது அமைதியாய் வாழ்வோமே

யாழில் 🔥🔥🔥
பரவிய தீ தியேட்டரில்
நிறைந்த மக்கள் வெள்ளமே.

என்பத்திமூன்றில் 🔥 தீ
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே .

அடி தடி
கடைகள் கொள்ளை
காடையர் விரட்டவே தமிழர் அகதியாய் பிறந்த யாழ் மண்ணுக்கு
உடுத்திய உடுப்புடன்
கப்பலில் திரும்பினரே
மூட்டிய 🔥

சிங்கள இனவெறி கொண்டு மூட்டியே 🔥

யாழ் நூலகம் தீயிலே வெந்து நூல்கள் கருகி பொசுங்கியதே
மீண்டும் நூலகம் தலை நிமிர்ந்தே
நிற்கிறதே..
.
அன்னையிட்ட 🔥
அடிவயிற்றிலே
பின்னையிட்ட தீ.
மூழ்க மூழ்க என்று
பட்டினத்தார் பாடினாரே
அன்னைக்கும்
அப்பனுக்கும்
இறுதி கொள்ளி சுடுகாட்டிலே. மூட்ட உடலும் 🔥 சாம்பலானதே!!!

காட்டுத் 🔥
கருகிய விலங்கினம் உயிரினம் அழிகிறதே

மரம் செடி கொடி இயற்கை அழிவை தடுக்க அரசும் போராடுகிறதே.

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan