கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 224. 30.5.23

நகுலவதி தில்லைதேவன்.

மூண்ட தீ

கார்த்திகையில் அண்ணாமலையில்
அண்டாவில் மூண்டிய 🔥
பத்தகோடிகளை
பரவசப்படுத்துமே.

சிறிலங்காவில்
மூண்டது தீ 🔥
சீதையிட்ட
சாபமே தொடருது
தீவைப்புக்களே.

தீயினால் சுட்ட புண் ஆறுமே நாவினால் சுட்ட வடு ஆறுமோ. தீயை மூட்டாது அமைதியாய் வாழ்வோமே

யாழில் 🔥🔥🔥
பரவிய தீ தியேட்டரில்
நிறைந்த மக்கள் வெள்ளமே.

என்பத்திமூன்றில் 🔥 தீ
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே .

அடி தடி
கடைகள் கொள்ளை
காடையர் விரட்டவே தமிழர் அகதியாய் பிறந்த யாழ் மண்ணுக்கு
உடுத்திய உடுப்புடன்
கப்பலில் திரும்பினரே
மூட்டிய 🔥

சிங்கள இனவெறி கொண்டு மூட்டியே 🔥

யாழ் நூலகம் தீயிலே வெந்து நூல்கள் கருகி பொசுங்கியதே
மீண்டும் நூலகம் தலை நிமிர்ந்தே
நிற்கிறதே..
.
அன்னையிட்ட 🔥
அடிவயிற்றிலே
பின்னையிட்ட தீ.
மூழ்க மூழ்க என்று
பட்டினத்தார் பாடினாரே
அன்னைக்கும்
அப்பனுக்கும்
இறுதி கொள்ளி சுடுகாட்டிலே. மூட்ட உடலும் 🔥 சாம்பலானதே!!!

காட்டுத் 🔥
கருகிய விலங்கினம் உயிரினம் அழிகிறதே

மரம் செடி கொடி இயற்கை அழிவை தடுக்க அரசும் போராடுகிறதே.

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading