நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகுலா சிவநாதன்

கட்டார் பந்தாட்டம்

காலை கதிரவன் கண்ணே விழித்திடவே
சோலைப் பைங்கிளி சோகம் பாடிடவே
மாலை முழுதுமே மகிழ்வு தோன்றிடவே
பாலை வெளியிலே பகலே படர்ந்ததே!

கட்டார் நாட்டில் உதைபந்தும்
கனமாய் சுற்றி உருள்கிறதே!
பட்டி தொட்டி எங்கணுமே
பந்தின் வெற்றி பேச்சுக்களே!
வெற்றி தோல்வி விளையாட்டில்
வெறுமை வாழ்வு நிலைநாட்டும்
பற்றி ஒன்றி ஒற்றுமையும்
வெற்றியோடு விளைகிறதே!!

நாடுகள் பலவும் போட்டியாக
நன்றாய் உழைக்கும் நல்லாட்டம்
மதியும் இங்கு நுட்பமாக
மதிக்கும் உலக ஆட்டமுமே!!

நகுலா சிவநாதன்1701

Nada Mohan
Author: Nada Mohan