மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

காதல்

மின்னல் கொண்ட விழிகள்
மீட்டும் இராக நல்லிசையே!
கன்னல் மொழியே பேசும்
கன்னி யுள்ளம் பேரழகு!
சன்னல் வழியே பார்த்துச்
சாடை காட்டும் காட்சியெல்லாம்
இன்னல் யாவும் நீக்கும்!
இனிதாய் வாழ வழிகாட்டும்!

புவியில் பிறந்த பிறப்பும்
பொலியும் தங்க நிலையேற்கும்!
கவியில் பாடும் கருத்தும்
கன்னல் நல்கும் சுவையேற்கும்!
குவியும் சொற்கள் சேர்ந்து
கொஞ்சும் இன்பக் கலையேற்கும்!
‌செவியில் கேட்கும் கானம்
செம்மைத் தமிழின் சீர்காட்டும்

மென்மை கொண்ட பெண்மை
மேன்மை கொண்ட பிறப்பாகும்!
கன்னம் சிவக்கும் காதல்
கனிந்து மேவும் கூட்டுறவு
பின்னல் பின்னும் அழகி
பிறைபோல் சூடும் நற்சுட்டி
இன்பம் தருமே கோடி
ஈடில் தமிழைப் பாடி!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading