” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது

அருகிடும் வாழ்விலே அறிவினை ஆதாரமாக்கி
பெருகிடும் வலிமையை பெருக்குதல் நலமே!
உருகிடும் வாழ்விலும் உணர்வின் உந்தலை
உலகாளும் திறனாக வளர்ப்பதில் பேரின்பம்
கருகிடும் பயிரும் கணப்பொழுது வாழ
கசிந்து பாயும் நீரும் தேவையன்றோ!
பருகிடு;ம் நீரால் பயனது உண்டு
பற்றோடு வாழ்வில் வலிமை பேரின்பம்!

பெருகிடும் வலிமையே பேருதவி செய்திடும்
பெயரினை அதுவே பறைசாத்திடும்
அருகிடும் செயலும் அணுவது ஆனாலும்
ஆற்றலை வளர்ப்பது அனுதினம் வேண்டுமன்றோ!
பெருகிடும் வலிமையைப் பெற்றே கொள்
பெருகியே நிற்கும் தடையதை உடை!
விடையது கிடைக்கும்

நகுலா சிவநாதன்1705

Nada Mohan
Author: Nada Mohan