பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நகுலா சிவநாதன்

பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது

அருகிடும் வாழ்விலே அறிவினை ஆதாரமாக்கி
பெருகிடும் வலிமையை பெருக்குதல் நலமே!
உருகிடும் வாழ்விலும் உணர்வின் உந்தலை
உலகாளும் திறனாக வளர்ப்பதில் பேரின்பம்
கருகிடும் பயிரும் கணப்பொழுது வாழ
கசிந்து பாயும் நீரும் தேவையன்றோ!
பருகிடு;ம் நீரால் பயனது உண்டு
பற்றோடு வாழ்வில் வலிமை பேரின்பம்!

பெருகிடும் வலிமையே பேருதவி செய்திடும்
பெயரினை அதுவே பறைசாத்திடும்
அருகிடும் செயலும் அணுவது ஆனாலும்
ஆற்றலை வளர்ப்பது அனுதினம் வேண்டுமன்றோ!
பெருகிடும் வலிமையைப் பெற்றே கொள்
பெருகியே நிற்கும் தடையதை உடை!
விடையது கிடைக்கும்

நகுலா சிவநாதன்1705

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading