மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

பசி

உடலை உறுத்தும் உணர்வோடு போராடும்
கடலை விட காசினியில் வறுமை கொடுமை
நிழலாய் தொடரும் நிம்மதி இழக்கும்

பசியின் கொடுமை பாரை வருத்தும்
நிசியில் நிம்மதி கிடைக்காமல் போய்விடும்
களவும் செய்யும் கடனும் வாங்கும்
கண்மணி மறைக்கும் காலம் உரைக்கும்

உடலை ஒறுக்கும் பசியின் நிலையில்
உணர்வை மதிக்கா ஓட்டம் வாழ்வாய்
வறுமை வருவது வாழ்வில் நிலைப்பது
பொறுமை அழித்திடும் பொழுதையும் சுருக்கிடும்

சந்ததி தாக்கும் சரித்திரம் எழுதும்
வந்தது வரட்டும் வாழ்வை சுருக்கிடும்
நேர்மை வாழ்வும் நேரிய உழைப்பும்
ஏழ்மை வந்தாலும் எடுத்திடு முயற்சியை

நகுலா சிவநாதன்
1685

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading