நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகுலா சிவநாதன்

பசி

உடலை உறுத்தும் உணர்வோடு போராடும்
கடலை விட காசினியில் வறுமை கொடுமை
நிழலாய் தொடரும் நிம்மதி இழக்கும்

பசியின் கொடுமை பாரை வருத்தும்
நிசியில் நிம்மதி கிடைக்காமல் போய்விடும்
களவும் செய்யும் கடனும் வாங்கும்
கண்மணி மறைக்கும் காலம் உரைக்கும்

உடலை ஒறுக்கும் பசியின் நிலையில்
உணர்வை மதிக்கா ஓட்டம் வாழ்வாய்
வறுமை வருவது வாழ்வில் நிலைப்பது
பொறுமை அழித்திடும் பொழுதையும் சுருக்கிடும்

சந்ததி தாக்கும் சரித்திரம் எழுதும்
வந்தது வரட்டும் வாழ்வை சுருக்கிடும்
நேர்மை வாழ்வும் நேரிய உழைப்பும்
ஏழ்மை வந்தாலும் எடுத்திடு முயற்சியை

நகுலா சிவநாதன்
1685

Nada Mohan
Author: Nada Mohan