நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகைப்பானதே மனித நேயம் -2127 ஜெயா நடேசன்

நகைப்பானதே மனித நேயம் -2127 ஜெயா நடேசன்
மனித நேயம் என்றாலே
வாட்டும் நெஞ்சுகள் வளமாக
ஆற்றும் செயல்பாடுகள்
புனிதம் பெறவே மனிதநேயம்
இயற்கை அன்னை சீற்றத்தால்
பெருகியது மழையும் வெள்ளமும்
பொங்கியது கடலும் கொந்தளிப்பும்
மனித நேயமும் சேர்ந்துதானே
கொள்கைகளோ மனதை உருக்குதே
எண்ணித் துணிக கரும செயல்கள்
மண்ணில் மனித நேயப் பண்பாடே
பதவிக்கும் சுகபோக வாழ்வுக்கும்
தடம் மாறுவோர்கள் பலதுமாய்
தலை சார்ந்தது தன்மானமற்ற செயலே
தற்போதைய அரசு ஆரோக்கியமானதே
அரசியல் செயல்பாடுகள் நீதியாகினால்
தேசம் வளமாய் உயிர் பெற்றிடுமே

Author: