அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நன்றியாய் என்றுமே

ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய் இருந்து பலரை ஏற்றிவைத்தார்
பேணி நல்லன்பை பெற்றவராய் அரவணைத்தார்

ஈன்ற தாயைப்போல உறவோடு இருந்தவர்கள்
சான்றோராக்க மாணவர்களை தங்களை ஒறுத்தவர்கள்
என்றென்றும் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்
நன்றிக்கும் வாழ்த்துக்கும் வாழ்க்கையிலே தகுதியானவர்கள்

அடைந்த வெற்றிகளுக்கு அடிப்படை காரணம்
கிடைத்த முகவரிக்கு மூலமே ஆசிரியரினம்
ஆறாமறிவை ஊட்டியவர்க்கு நன்றியை என்றுமே
கூறாமல் இருந்திடலாமா கூறிடுவீர் என்றென்றுமே

04-09-2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading