” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே

ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய் இருந்து பலரை ஏற்றிவைத்தார்
பேணி நல்லன்பை பெற்றவராய் அரவணைத்தார்

ஈன்ற தாயைப்போல உறவோடு இருந்தவர்கள்
சான்றோராக்க மாணவர்களை தங்களை ஒறுத்தவர்கள்
என்றென்றும் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள்
நன்றிக்கும் வாழ்த்துக்கும் வாழ்க்கையிலே தகுதியானவர்கள்

அடைந்த வெற்றிகளுக்கு அடிப்படை காரணம்
கிடைத்த முகவரிக்கு மூலமே ஆசிரியரினம்
ஆறாமறிவை ஊட்டியவர்க்கு நன்றியை என்றுமே
கூறாமல் இருந்திடலாமா கூறிடுவீர் என்றென்றுமே

04-09-2025

Nada Mohan
Author: Nada Mohan