” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நம்பிக்கை..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2191!!

நம்பிக்கை ..!!!

ஆயுதமா ஆணி வேரா அன்பா
அல்லது அரவணைக்கும் கையா!
பலம் சேர்ப்பதா பலவீனமா
புலன் ஈர்ப்பதா அக அத்திரமா!!
நட்பின் வடிவமா நலம் தருவதா
நா நிலம் வேண்டுவதா நல்லதா!!பிறப்பில் கூட வந்ததா அன்றி
இறப்பினை விரட்டுவதா இயல்பா!!
இயற்கை தந்த மதியா அல்ல
இறைவன் வகுத்த விதியா!!
உறவாய்க் கூட வருவதா
உயர்வை எட்ட வைப்பதா இன்னும்
உள்ளம் வேண்டி நிற்பதா
உலக விதியை மாற்றுவதா!!
ஐந்தாம் அறிவின் உணர்வா
ஆறாம் அறிவின் உராய்வா!!
நிம்மதி தொலைப்பதா
நித்திய அமைதி காப்பதா
கதிரவன் போன்றதா இல்லை
கடும் புயல் ஒத்ததா இன்னும்!!
யாரறிவீர் யாதுரைப்பீர்
ஏது வாழ்வின் பயணத்தில்
நம்பிக்கை ..இருள் தருமா?

சிவதர்சனி இராகவன்
14/8/2025

Nada Mohan
Author: Nada Mohan