திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நம்பிக்கை..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2191!!

நம்பிக்கை ..!!!

ஆயுதமா ஆணி வேரா அன்பா
அல்லது அரவணைக்கும் கையா!
பலம் சேர்ப்பதா பலவீனமா
புலன் ஈர்ப்பதா அக அத்திரமா!!
நட்பின் வடிவமா நலம் தருவதா
நா நிலம் வேண்டுவதா நல்லதா!!பிறப்பில் கூட வந்ததா அன்றி
இறப்பினை விரட்டுவதா இயல்பா!!
இயற்கை தந்த மதியா அல்ல
இறைவன் வகுத்த விதியா!!
உறவாய்க் கூட வருவதா
உயர்வை எட்ட வைப்பதா இன்னும்
உள்ளம் வேண்டி நிற்பதா
உலக விதியை மாற்றுவதா!!
ஐந்தாம் அறிவின் உணர்வா
ஆறாம் அறிவின் உராய்வா!!
நிம்மதி தொலைப்பதா
நித்திய அமைதி காப்பதா
கதிரவன் போன்றதா இல்லை
கடும் புயல் ஒத்ததா இன்னும்!!
யாரறிவீர் யாதுரைப்பீர்
ஏது வாழ்வின் பயணத்தில்
நம்பிக்கை ..இருள் தருமா?

சிவதர்சனி இராகவன்
14/8/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading