” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நவராத்திரி நாயகிகள்

கெங்கா ஸ்ரான்லு

நவராத்திரி ஒன்பது நாள்
முதல் மூன்று நாள் துர்க்கைக்கும்
மலைமகள் வீரத்திற்கு தலைவி
வீரம் வேண்டி தவம் இருந்தால்
தரணியாள வரம் குடைக்கும்
அடுத்த மூன்று நாள் திருமகளுக்கு
இந்த நாளில் விரதமிருக்க
அலைமகளாகிய லட்சுமி கடாட்சம்
கிடைக்கும்
செல்வம் பெருகும் மகிழ்வுடன
கஷ்டமின்றி வாழலாம்
கடைசி மூன்று நாளும்
கலைமகளுக்கு
கல்விக்கரசியல்ல்லவா
கற்றோராய் வர வரமளிப்பவள்
மலைமகள் அலைமகள் கலைமகள்
மூவரும் ஒருஇடத்தில் சேர்ந்து இருந்தால்
நிகரே இல்லை
அவர்கள் இணைந்திருப்பது அருமை
ஒருவரிடம் லட்சுமி இருப்பாள்
கலைமகள் இருக்க மாட்டாள்
புலவரிடம் கலைமகள் இருப்பாள்
வறுமை அங்கு நிறைந்திருக்கும்
சிலரிடம் துர்க்கை இருக்க மாட்டாள்
அரசனிடம் செல்வம் வீரம் இருக்கும்
கல்வி இருக்காது
இராவனேஸ்வரனிடம் கல்ஙி செல்வம் வீரம்
மூன்றும் இருந்தும் முட்டாள் ஆனானே
சிலருக்கு மட்டுமே அப்படி பாக்கியம்
கிடைக்கும்
மூன்றும் ஓரிடத்தில் இருக்க
முத்தேவியர் அருள் வேண்டும்!

Nada Mohan
Author: Nada Mohan