நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நாடகம் 87

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025

கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை கூறுவது நாடகம்!

சிரிப்பு, அழுகை , சோகம், கோபம்,
சிங்காரித்து சில பாத்திரமும்
திரைக்குப் பின் மறைந்தவையை
திறந்த அரங்கில் வெளிச்சமாக்கி

கதையை பலகோணமாய்
கண்டவரை நோகடிக்காமல்
கலை வடிவில் கருவை நிறுத்தி
காலம் கடந்து அறிவால் உணர்த்தி

நாடகம் வெறும் நடிப்பல்ல உணர்ந்து
நம் வாழ்க்கைப் பாடத்தை புரிந்து
உணர்வுகளை மொத்தமாய்த் திரட்டி
உணருகின்றேன் என்னுள்ளும் மாற்றம்.

Jeba Sri
Author: Jeba Sri