” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

-நாதன் கந்தையா-

= விடியல் =

பேய் கொள்ளும்
பிணியொடொரு பிரிவும் சேரும்.
பித்தொடு பிடாரிகளும்
துணையாயாவர்.
தாயில்லை சேயில்லை
இல்லுமில்லை.
தரித்திரமே உருத்திரமாய்
கொள்வார் காண.
வேர்மூலம் விடையில்லா
வினைகள் ஓங்கும்.
வேடன் கை வலையாக
சதிகள் சூழும்.
கானகத்தில் வாழ்வதுபோல்
கனவும் தோன்றும்.
காற்றிடையே தூசியென
வாழ்வும் ஆகும்.
பாழாகி போவாய் நீ
என்பாள் தாரம்.
பக்கதில் கொள்ளாமல்
சுற்றம் மேவும்.
நேராக இடிவந்து தலையில் வீழும்.

நிறைவாக அஃதே னென்று
கேட்டால் நீயும்.

மானுடத்தின் விடியலை யார்
தடுத்தார் என்றால்
மாற்றமில்லை அத்தனையும்
நடந்தே தீரும்.

அறிவு நிறை ஓர்ப்புடனே
கடைப்பிடித்து.
கண்ணியமாய் பெண்ணியத்தின்
விடியல்மீது
களங்கமது புழங்க எவர்
முயன்றால் மேலே
கண்டதெல்லாம் தொடரும்
உன் வாழ்வில் லென்பேன்.

– நாதன் கந்தையா-

Nada Mohan
Author: Nada Mohan