நாளை

ஜெயம் தங்கராஜா

இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும் விடிந்திடாதோ நாளை
வேளையும் வந்து மகிழ்விக்காதோ நாளை

தேடி அலைபவருக்கு கிடைத்திடாதோ நாளை
நாடியவர்க்கு இறைவன் அருளாரோ நாளை
சுமைகளும் நீங்கி சுகமாகாதோ நாளை
அமைதியின் கோலம் வாராதோ நாளை

புது யுகமொன்று மலராதோ நாளை
புதுமையின் பக்கங்கள் விரியாதோ நாளை
நன்மைகள் தாங்கியே உருவாகிடாதோ நாளை
இன்றல்ல நேற்றல்ல மாற்றங்களோ நாளை.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading