நிழலாடுதே நினைவாயிரம்

செல்வி நித்தியானந்தன்
நிழலாடுதே நினைவாயிரம்

நினைவென்னும்
நிழலாடும் புத்தகம்
நித்திய சேமிப்பில்
நின்றாடும் சரிதம்

சோகமும் மகிழ்வும்
பங்கேற்ற
தாகமாய் எப்போதும் மனதும்
கரைபுரளும்
பாகமாய் பலதும்
பழியுடன் வந்திட
வேகமாய் விரட்டியே
விரும்பிச் சென்றிட

தாயினது மறைவு
தாங்கமுடியா சோகம்
தந்தையின் இறப்பு
தனித்ததே குடும்பம்

பசி பணம் பரிதவிப்பு
பக்கபலம் யாருமில்லை
படிப்பு துணகொண்டுதான்
பாதிவ்ளம் வென்றோமே!

செல்வி நித்தியானந்தன்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading