நிழல்தேடும் வேளை…..

ரஜனி அன்ரன் (B.A) நிழல்தேடும் வேளை…02.07.2026

வெய்யிலின் உக்கிரம் உலகை உலுக்கும்போதுதான்
நிழலின்அருமை தெரிகிறது பிரமாண்டமாய்
வானத்து வெய்யோனும் வறுத்தெடுக்க
பூமித்தாயவளும் வெந்துபுளுங்கிட
அனல்காற்றும் தீய்த்துக்கொள்ள
அக்கினிப் பெருநாளின் உச்சிப்பொழுதினில்
நிழல்தேடி அலையும் வேளையிது !

சுட்டெரிக்கும் சூரியனின் சுடுநெருப்பால்
சுருங்கிப் போகிறதே ஜீவராசிகளின்வாழ்வு
வரலாறு காணாதவகையில் ஐரோப்பிய நாடுகளும்
வகை தொகையின்றிப் பாதிப்பு
ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பு
நிழல்தேடி ஆறுகுளம்நாடி மக்களும் படையெடுப்பு !

அன்று தருக்களை வெட்டிச்சரித்தோம்
அகந்தைகொண்டு காடுகளை அழித்தோம்
அனல்வெப்பம் தாங்கமுடியாமல் – இன்று
அதேமரத்தில் நிழல்தேடும் வேளையிது
நிழலின்அருமையை வெய்யிலில் உணர்ந்தோம்
தருக்களின்பெருமையை தாகத்தில் உணர்ந்தோம் !

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading