“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(82) 23/11/22
தலை நிமிர வாழ்ந்தோர்க்காய்
நம் தலை சாய்ப்போம்.

புழுதியும் குருதியும் தழுவிய தேசம்
ஈழத் தாய் மண்ணின் சோகம்
மாற்றம் கேட்டு நிற்கும் மறத் தமிழர்

புரட்சியின் வித்துக்களாய்
அழுத்தத்தின் உதறல்களாய்
அடிமை மண்ணை மீட்டெடுக்க
குல மாதர் மானம் காக்க

அடிமைப் பூட்டுடைக்க
விடுதலை வேட்கை கொண்டு
அக்கினிப் பறவைகளாய்
கடமையில் உயர்ந்த கர்ம வீரர்கள்

அன்பாகி அன்பில் நிலையாகி
இருள் போக்கும் பணியில் நெருப்பாகி
மண் காக்க மனிதம் நிமிர
தம்முயிரீந்த மண்ணின் மைந்தர்கள்

தியாக தீபங்களை எம் நெஞ்சிலே தாங்கி
கார்த்திகை மலர்களை கரங்களில் ஏந்தி
மனிதம் நிமிர தம் தலை சாய்த்த
மா வீரர்களுக்காய் எம் தலை சாய்ப்போம்
அஞ்சலிப்போம் வீர வணக்கங்களுடன்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading