மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(66). 28/07 22
உலகாளும் நட்பே

பசுமை நிறைந்த நினைவுகளை
பாடிக் கழித்த பொழுதுகளை
நெஞ்சினில் சுரந்த அன்போடு
இளையோடி உறவாடி வளர்த்தெடுத்த நட்பு
தொடர்ந்திடுமே பாரெங்கும்ஆண்டாண்டு காலம்.

தோள் கொடுக்கும் தோழனாய்
தோளில் சாயவோர் தோழியாய்
ஆண் பெண் வயதெல்லை பேதமின்றி
உரிமையோடு பழகும் உன்னத் நட்பு.

பாதைகள் மாறிடினும் பயணங்கள் தொடர்ந்திடினும்
தேசங்கள் உலாவிடினும் பாசங்கள் மறப்பதில்லை
புன்னகையொன்றே போதும் நண்பர்கள் சேர்ந்திடவே
புதைந்து போகும் வரை தொடர்ந்திடுமே நன் நட்பு

என் சோகம் உனில் கொட்டி உன் பாரம் நான் சுமக்க
நம்பிக்கை விதை தூவி வெற்றியெனும்
அறுவடையை அறியச் செய்யும் நட்பு
வீழ்ந்தாலும் கை கொடுக்கும் நட்பு
நம் நட்பு உலகாளும் நட்பு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading