16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
நேவிஸ் பிலிப்
18/8/22
கவி இல( 69)
கோர வெப்பம்
அழியாத ஓவியமாம்இயற்கையினை
சீரழித்தான் ஆறறிவழிந்த மனிதன்
பொறுமை காக்கும் நில மகளும்
கொதிக்கின்றாள் சீற்றமுடன்
பூமியெங்கும் கடும் வெப்பம
தவழ்ந்து வரும் தென்றல் காற்றும்
அனலாய் கொதித்திடவே
வெப்பம் தாங்கா மக்கள் தினமும் தவித்திடவே
நீர் நிலைகள் வற்றிப் போச்சு
பயிர் பச்சையும் வாடிப் போச்சு
தாகம் தீர்க்க தண்ணீரின்றி
மாக்களெல்லாம் மடியுதிங்கே
குழாய் தண்ணீரும் வாரா நிலை
குடி நீருக்காய் மக்கள் தவிக்க
காய்ந்து வெடித்த நிலங்களிலே
பசுமைகள் கருகலாச்சு
பெரு மரக் காடுகளும்
காட்டுத் தீயால் பற்றி எரிய
ஊருக்குள்ளும் பரவிய தீயால்
தற்காப்பாய் மக்கள் வேறிடம் நாட
கரு மேகமே வான் முகிலே
பெரு மழையாய் நீ பொழியாயோ
இறைவா உம் கருணையின்றி இவ்விடர்
தீர்த்திடுவார் யாருளரோ?
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...