மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (70). 25/08/22
தேடும் விழிகளுக்குள்
தேங்கிய வலி

உறவுகளைத் தேடித் திரிந்து
ஊரெல்லாம் ஓடியலைந்து
அன்பைத் தேடி அநாதையாகி
வழி பார்த்துக் கண்கள் நீர் கோர்த்து நிற்க

விழி மூடினால் விதி தெரியுது
விழுத்தெழுந்தால் அதன் வலி தெரியுது
விழி மூடி வலி மறக்க ஏது வழி
வேதனையின் விளிம்பில் அங்கலாய்க்குது இதயம்

வருந்தித் தினமும் அழுவதே வாழ்க்கையாக
தேடும் விழிகளில் தேங்கிய வலிகள்
துயர் தொலைக்க அழலாமென்றால்
கண்களிரண்டும் பாலை வனமாய்

ஆண்டுகள் பல கடந்த நிலை
தமிழர் தலை எழுத்தில் மாற்றமில்லை
கண்டு கொள்வோர் யாருமில்லை
இழப்புக்களின் வடுக்களும் மாறவில்லை

வலியோடு நினைவுகள் இதயத்தைக் குத்த
ஆறாய்க் கண்ணீர் விழி வழி பெருக
ஏங்கிக் குமுறுது நெஞ்சம்
தொலைந்தவர் வருவாரோ?
கவலைகள் மறைந்திடுமோ??

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading