” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (121) 08/02:24
சுதந்திர தாகம்

செந்தமிழில் தேசிய கீதம்
இசைத்து இன்பமாய் வாழ்ந்திருந்தோம்
இதம்தந்த வாழ்வை
இனி நாம் என்று
காண்போமோ

நால்வகை மதமும்
ஒன்றாய் இணைந்து
ஒருவனே தேவன் என
புனிதம் போற்றி
மனிதம் போற்றி வாழ்வோமோ

இதம்தரும் வாழ்வில்
மகிழ்ச்சி ஓங்கி
இமை என நம்மைக் காத்து
மனம் நிதம் மகிழ
சுதந்திரமாய் வாழ்ந்தோம்
சுற்றுலாவில் மகிழ்ந்தோம்

நல்லிணக்க ஆட்சியிலே
நாடே செழிக்க
ஒருவர்க்கொருவர்
பகிர்ந்து வாழ
அறத்திறன்வளர்த்து
அடிமைத் தளையறுக்க
சுதந்திரம் வருமா?

Nada Mohan
Author: Nada Mohan