ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பசுமை

செல்வி நித்தியானந்தன்
பசுமை

பசுமை என்றாலே
பார்க்கும் விழிகளில்
பரவசம் உண்டாகும்
பாரும் செழிப்புறும்
மரம்செடி கொடியும்
பசுமை காட்சியாகும்
மழையும் பொழிந்து
உயிர்ப்பாய் சாட்சியாகும்
பசிபோக்க விலங்கும்
புற்களை உண்டிடும்
பறவையும் புசிக்க
பசுமையை நாடிடும்
தெருவோர மரமும்
தென்றலாய் தழுவும்
தருவும் அழித்து
பசுமை மறையுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading