” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பட்ட மரம்

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _185

“பட்ட மரம்”

ஆச்சி மாமர நிழலில்
ஆனந்த தேரோட்டம்
ஊஞ்சல் கட்டி
ஊசலாட்டம் ஊர் கூடி!

பங்குனி புழுக்கம்
சித்திரை அனல் கொதிக்க
ஆச்சி மா நிழலில் அருமை பெருமை
காத்து வாங்கி வாங்கி!

அம்மா நிழலில் அமர்ந்து
தூள் இடிச்சு
மாடிச்சு
கச்சான் வறுத்து கதைபேசி உண்டு மகிழ்ந்து!

மாமர நிழலிருந்து
நிலாபாத்து
சோறுண்டு
கூடியிருந்து
கூழ் குடித்து
கூடி மகிழ்ந்த
பொற்காலம்!

பரம்பரையாக வாழ்ந்த ஆச்சி மாமரம் புளியை மீனறியும்
சுவையை நானறிவேன் பிள்ளைகள்
பேரப்பிள்ளை பூட்டப்பிள்ளை கொப்பாட்டனையும் கண்டு மகிழ்ந்து
நிழல்தந்து
நீடூடி வாழுது ஆச்சிமாமரம் தாய்மனையில்
நிஜத்தில்!

நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
29.03.25

Nada Mohan
Author: Nada Mohan