இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பட்ட மரம்

வஜிதா முஹம்மட்
வழுவிழந்த வேர்
இலையிழந்த தேர்
அலங்கரித்த குடை
ஆழ்மண் ௨ரமிடை
பாரியாட்டம் கொடை
வாழ்ந்து ஓய்ந்த சடை

நித்தமும் நின்றாய்
நிழல்தான் தந்தாய்
பட்டுப்போய் வெந்தாய்
பாரின் வாழ்வு இதுதான்
தத்துவம் சொன்னாய்
மானிடா சிந்தித்துப் பார்
மனிதம் துறந்த போர்
மண்ணில் பாரம் நீ
என்னைப் பார் நீ
க௫வோடு க௫ணை
வாழ்வோடு தொடர்கை
மறைந்த பின்னும் ஈகை

காய்ந்துபோய் விழுந்தாலும்
ச௫காவேன்
சிறிதாய் நான் விழுந்தாலும்
சுள்ளியாவேன்
சாய்ந்து போய் விழுந்தாலும்
விறகாவேன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading