” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பட்ட மரம்

வஜிதா முஹம்மட்
வழுவிழந்த வேர்
இலையிழந்த தேர்
அலங்கரித்த குடை
ஆழ்மண் ௨ரமிடை
பாரியாட்டம் கொடை
வாழ்ந்து ஓய்ந்த சடை

நித்தமும் நின்றாய்
நிழல்தான் தந்தாய்
பட்டுப்போய் வெந்தாய்
பாரின் வாழ்வு இதுதான்
தத்துவம் சொன்னாய்
மானிடா சிந்தித்துப் பார்
மனிதம் துறந்த போர்
மண்ணில் பாரம் நீ
என்னைப் பார் நீ
க௫வோடு க௫ணை
வாழ்வோடு தொடர்கை
மறைந்த பின்னும் ஈகை

காய்ந்துபோய் விழுந்தாலும்
ச௫காவேன்
சிறிதாய் நான் விழுந்தாலும்
சுள்ளியாவேன்
சாய்ந்து போய் விழுந்தாலும்
விறகாவேன்

Nada Mohan
Author: Nada Mohan