பணமா-பாசமா-2038 ஜெயா நடேசன

பணமா-பாசமா-2038 ஜெயா நடேசன்
பணம் உள்ளவரை மட்டுமே பாசம்
சொத்து இருக்கும் மட்டுமே பந்தம்
வேலை உழைப்பு சேர்ப்பில் பணம்
பிள்ளைகள் தனி வாழ்வில் பாசம்
பணம் இருப்பின் நாற்பது பேர் மதிப்பர்
பணம் இல்லையேல் நாலு பேரும் வரார்
பணம் உள்ளோன் பயத்தில் வாழ்வர்
பணம் அற்றவன் கவலை கொள்கிறான்
வாழ்வில் நிம்மதி பணத்திலே இல்லை
குணத்தில் பெற்று வாழும் பாசம்
பணம் சில உறவுகளை பாசமாக்கிறது
பல உறவுகளை புறக்கணிக்கிறது
கடவுளிடம் மன்றாடி பணம் பெறுகிறான்
பாசத்தில் பணம் உண்டியலில் போடுகிறான்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading