பணி…

வசந்தா ஜெகதீசன்
பணி…
வரமானது வாழ்வானது
வளம்பெருக்கும் துறையானது
சமூகத்தை சீராக்கும்
சராசரி மனிதத்தை நிலை நிறுத்தும்
துறைசார் பணி நூறு
துலங்கிடும் உலகிற்கு ஈடானது
வரம்பெல்லை வகுத்திடும்
வருமான முதலீடு
பணிக்குள்ளே பல பாதை
பாரெங்கும் இதன் சாலை
தொழில் நுட்ப உலகியலில்
மின் போல பாய்கிறது
மிடுக்குடன் இயந்திரங்கள்
பணிகள் பல பஞ்சமாகும்
பலதுறைகள் செயலிழக்கும்
வேலையில்லாத் திண்டாட்டம்
விலைவாசி போல
எகிறிடுமே
இயந்திரமயமாக்கல்
வையத்தின் வசமாகுமே!
நன்றி
மிக்க நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading