பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பண்டிகை வந்தாலே!

நகுலா சிவநாதன்

பண்டிகை வந்தாலே!

பண்டிகை வந்தாலே
பலனும் கிடைக்கும்
பலகாரம் செய்திடுவோம்
பண்போடு கூடி மகிழ்வோம்

மத்தாப்பு கொழுத்தி
மகிழ்ந்திருந்த தீபாவளி
தித்திக்கும் இனிமையுடன்
திடமாக வந்திடட்டும்

பட்டாடை அணிந்து
பலகாரம் செய்து
புத்தாடை போட்டு
புனிதம் நிறைந்து
கொண்டாடும் பண்டிகை
புனிதம் பெறட்டும்

தீபங்கள் ஏற்றி
தீந்தமிழ்பாடி
தூபங்கள் இட்டு
தூய்மை காப்போம்

நண்பர்கள் சேர்ந்து
நட்புடன் கூடி
பலகாரம் உண்டு
பண்போடு வாழ்வோம்

நகுலா சிவநாதன் 1784

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading