மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

பத்மலோஜினி திருசெந்தூர்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 194

தலைப்பு — ஆட்டத்தை அடக்கிட வீரம்

எம்மோடுள்ள ஐவர் எமக்கே எதிரிகள்
வம்பை வளர்ப்பர் வில்லங்கம் விளைத்திடுவர்
அம்பாய் எழுந்து இவர்களை அடக்கிட
எம்மிடம் வீரம் இருந்திட வேண்டும்.

ஐம்புலன் ஆட்டத்தை அடக்கிச் செயற்பட்டு
ஐம்புலன்களை ஒடுக்கி அறவழி நடப்பின்
எம்மிடம் அமைதியாய் ஏற்றம் இணைந்திடும்
நிம்மதி ஒளிவீசி நன்மை அளித்திடும்.

உளவுறுதி பெற்றோர் மனவுறுதி கொண்டு
புலனைந்தையும் மடக்கின் புதுமை பெறலாம்
வளமாய் அமைதியை விழுப்பத்தைச் சேர்க்கலாம்
நலமே வாழலாம் நல்லவை நாடிவரும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/10/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading