பந்தபாச செழிப்பு

ஜெயம் தங்கராஜா

பாசமும் நேசமும் ஒன்றையொன்று அரவணைக்கும்
கண்ணீரும் காய,புன்னகை குஞ்சுபொரிக்கும்
உறவுகள் தெய்வங்களாக குடும்பம் கோயிலாகும்
உணர்வுகள் பரிசுத்தமாக நாட்கள் அழகாகும்

வீடு, அது ஆனந்தப்பறவைகளின் கூடு
சொந்தங்கள் பந்தங்களாகி உருகிவிடும் உறவோடு
ஒன்றாக பிரிவின்றி வாழுவதே சொர்க்கம்
பிறப்பிலிருந்து இறப்புவரை குடும்பமொரு வரம்

குடும்பம் நம்மை வழிநடத்தும் திசைக்காட்டி
நெருக்கடியிலும் அருகிருக்கும் தைரியத்தை ஊட்டி
வேண்டுகின்ற போதெல்லாம் வேண்டுதலும் நிறைவேறும்
தோள் சாயத்தான் உரிமையோடு எத்தனைபேர்

ஒருவருக்கொருவர் ஆதரவளித்து புரிந்துகொள்ளும் தன்மை
சந்தோசத்தில் பங்கெடுக்கும் சிரிப்பொலியும் உண்மை
விட்டுக்கொடுப்பும் மன்னிப்பும் எல்லைகடந்தும் தொடரும்
பல்கலைக்கழகம் ஆகிவிடும் நல்லதொரு குடும்பம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading