நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பந்தபாச செழிப்பு

ஜெயம் தங்கராஜா

பாசமும் நேசமும் ஒன்றையொன்று அரவணைக்கும்
கண்ணீரும் காய,புன்னகை குஞ்சுபொரிக்கும்
உறவுகள் தெய்வங்களாக குடும்பம் கோயிலாகும்
உணர்வுகள் பரிசுத்தமாக நாட்கள் அழகாகும்

வீடு, அது ஆனந்தப்பறவைகளின் கூடு
சொந்தங்கள் பந்தங்களாகி உருகிவிடும் உறவோடு
ஒன்றாக பிரிவின்றி வாழுவதே சொர்க்கம்
பிறப்பிலிருந்து இறப்புவரை குடும்பமொரு வரம்

குடும்பம் நம்மை வழிநடத்தும் திசைக்காட்டி
நெருக்கடியிலும் அருகிருக்கும் தைரியத்தை ஊட்டி
வேண்டுகின்ற போதெல்லாம் வேண்டுதலும் நிறைவேறும்
தோள் சாயத்தான் உரிமையோடு எத்தனைபேர்

ஒருவருக்கொருவர் ஆதரவளித்து புரிந்துகொள்ளும் தன்மை
சந்தோசத்தில் பங்கெடுக்கும் சிரிப்பொலியும் உண்மை
விட்டுக்கொடுப்பும் மன்னிப்பும் எல்லைகடந்தும் தொடரும்
பல்கலைக்கழகம் ஆகிவிடும் நல்லதொரு குடும்பம்.

Nada Mohan
Author: Nada Mohan