” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பயணம் தொடரட்டுமே..

ராணி சம்பந்தர்

27.06.24
ஆக்கம் 322
பயணம் தொடரட்டுமே

நல்லவன் என நா வளர்ப்பவன்
வல்லவன் என
வாழாதவன்
பொல்லாதவன் எனப்
பேரெடுப்பவனோ
அல்லும் பகலும் தில்லு
முள்ளில் சிக்கித் தீயில்
கருகுபவன்

கள்ளக் குறிச்சியில்
குடி கூத்தாடியவன்
அள்ளிக் குடித்த மது
மயங்கியவன்
துள்ளும் உள்ளமதை
ஊனமாக்கியவன்
சில்லறையில் மலிவு
எனச் சீரழித்துக்
கல்லறையில் உயிரைச்
சீதனமாக்கியவன்

பல்லைக் கடித்து வாழ்ந்த மங்கையர்
சொல்லைக் கேளாத
தொல்லையர் இல்லை
என் நல்ல பாதை கண்டு பயணம்
தொடரட்டுமே
பரிதாப நெஞ்சங்கள்
அஞ்சி அஞ்சி வாழ்ந்த
அநியாயம் போதும் போதும் என்று

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan