” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பறிபோன சுதந்திரம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

[9:20 AM, 8/29/2024] +49 179 4295845: 28.08.24
ஆக்கம் – 327
பறிபோன சுதந்திரம்

பாரினில் பறிபோன சுதந்திரம்
தீராத நெறி கெட்ட
தந்திரம்
சேராத வெறித்தன
மந்திரம்
பாராத உதிரம் சீறுதே

போரினால் புகுந்த ஏதிலி சோர்வின்றிப்
பகிர்ந்து ஆர்வமுடன்
கூடிக் குலாவிய
ஆனந்தம்

எந்தப் பயமும் இன்றி
எங்கும் போய் வர
அங்கு அனுபவித்த
பேரானந்தம் இன்று
தொலைந்ததே

விதம் விதமாய் கத்திக்
குத்து வெட்டித் தீர்க்க
பதம்பதமாய்ப் பூதாகரம்
வெடித்துச் சுக்குநூறாக
சத்தமின்றி ஒரு நொடியில் போகுதே
உயிர்த் தானம்.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan