இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025

பள்ளிப் பருவத்திலே

புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்
என்னருமை பள்ளிப் பருவத்திலே

கனவுகள் எண்ணில் அடங்காதவை
கடந்துவிட பயிற்சி பலவாய்
அறிவின் தேடலாய் தொடங்கியவை
அற்புதப் பயணமாய் பிரகாசித்து

ஆசிரியர் அர்ப்பணிப்பு அளப்பெரியது
அழகிய தோழமை அரவணைப்பும்
பசுமரத்தாணியாய் நினைவுகளும்
பட்டுத் தெறிக்குது கண் முன்னே

யுத்த காலம் மொத்தமாய் வர
பிரிவின் நேரம் துயராய்க் கரைய
நெஞ்சம் நிறைந்த பாரமாய்
பள்ளிப் பருவமொரு வரமே.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading