பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025

பள்ளிப் பருவத்திலே

புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்
என்னருமை பள்ளிப் பருவத்திலே

கனவுகள் எண்ணில் அடங்காதவை
கடந்துவிட பயிற்சி பலவாய்
அறிவின் தேடலாய் தொடங்கியவை
அற்புதப் பயணமாய் பிரகாசித்து

ஆசிரியர் அர்ப்பணிப்பு அளப்பெரியது
அழகிய தோழமை அரவணைப்பும்
பசுமரத்தாணியாய் நினைவுகளும்
பட்டுத் தெறிக்குது கண் முன்னே

யுத்த காலம் மொத்தமாய் வர
பிரிவின் நேரம் துயராய்க் கரைய
நெஞ்சம் நிறைந்த பாரமாய்
பள்ளிப் பருவமொரு வரமே.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading