” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025

பள்ளிப் பருவத்திலே

புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்
என்னருமை பள்ளிப் பருவத்திலே

கனவுகள் எண்ணில் அடங்காதவை
கடந்துவிட பயிற்சி பலவாய்
அறிவின் தேடலாய் தொடங்கியவை
அற்புதப் பயணமாய் பிரகாசித்து

ஆசிரியர் அர்ப்பணிப்பு அளப்பெரியது
அழகிய தோழமை அரவணைப்பும்
பசுமரத்தாணியாய் நினைவுகளும்
பட்டுத் தெறிக்குது கண் முன்னே

யுத்த காலம் மொத்தமாய் வர
பிரிவின் நேரம் துயராய்க் கரைய
நெஞ்சம் நிறைந்த பாரமாய்
பள்ளிப் பருவமொரு வரமே.

Jeba Sri
Author: Jeba Sri