பள்ளிப் பருவத்திலே

செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)

பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச் சட்டையுடன் சென்ற காலம்
அள்ளிச் செல்ல புத்தகச் சுமையும்
கள்ளிச் செடியும் காலிலே வலியும்
மறக்க முடியாத நினைவின் வடுவும்

வெள்ளி வந்தாலே வரிசை நிரையும்
தள்ளி விழுத்தி ஓடும் சத்தம்
துள்ளும் மீன்போல் குழப்பும் நாளும்
எள்ளி நகையாடி காலமும் கடக்கும்
ஏங்கிய வலியும் மறக்கத்தான் முடியுமா

படிப்பிலே போட்டி பொறாமை இல்லை
துடிப்பும் என்றும் ஆர்வமும் அதிகம்
பள்ளிப் படிப்பும் வாழ்வாய் இன்றும்
சொல்லிச் செல்ல அற்புத வரமே
பசுமை நினைவாய் அழியா நினைவில்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading